சென்னை: மாநில தலைநகர் சென்னையில்  கொரோனா பாதிப்பு மண்டலம் வாரியாக சென்னை மாநகராட்சி பட்டியல் வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதாக தமிழகஅரசு கூறி வருகிறது. ஆனால், தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் நேற்று  ஒரே நாளில் 1,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,35,597 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மட்டுமே 1,391 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 1,19,626 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

தற்போதைய நிலையில், 13,224 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 19 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 2,747 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 13,143 பேருக்கு தொற்று சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.