டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 78,168 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 37லட்சத்தை தாண்டி உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை  வெளியிட்டுள்ள தகவலின்படி,   (காலை 7 மணி நிலவரம்)  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 78,168  பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,66,108  ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரேநாளில்1027  கொரோனா நோயாளிகள்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். இதனால்,  கொரோனா வைரசுக்கு  உயிரிழந்தோர் எண்ணிக்கை 66,460  ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் 62,144  பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் காரணமாக, இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28,99,521 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதிலும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் 7,99,538  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.