டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 82,860 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 38,48,968 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி,  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 82,860 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதன் காரணமாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,48,968  ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரேநாளில் 1026  கொரோனா நோயாளிகள்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். இதனால்,  கொரோனா வைரசுக்கு  உயிரிழந்தோர் எண்ணிக்கை 67,486 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரேநாளில் 67,874 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் காரண மாக, இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29,67,396 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதிலும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் 8,13,489 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநிலம் வாரியாக தொற்று பாதிப்பு விவரம்: