சென்னை: தமிழகத்தில் இன்று 543 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், அதிகபட்சமாக சென்னையில் இன்று புதிதாக 225 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.  தமிழகத்தில் இன்று 543 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 8,53,992 ஆக உள்ளது. அதிகபட்ச பாதிப்பாக தலைநகர் சென்னையில் இன்று மட்டும் 225 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 2,36,485 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக 562 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் 8,37,525 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது வரை 3,954 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு 12,513 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் தற்போது கொரோனாவுக்கு பேர் 1,837 சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 543 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,53,992 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:
அரியலூர் – 1
செங்கல்பட்டு – 46
சென்னை – 225
கோவை – 51
கடலூர் – 6
தர்மபுரி – 1
திண்டுக்கல் – 7
ஈரோடு -10
கள்ளக்குறிச்சி – 0
காஞ்சிபுரம் – 20
கன்னியாகுமரி – 6
கரூர் – 1
கிருஷ்ணகிரி – 1
மதுரை – 10
நாகை – 4
நாமக்கல் – 3
நீலகிரி – 3
பெரம்பலூர் -1
புதுக்கோட்டை – 5
ராமநாதபுரம் – 1
ராணிப்பேட்டை – 1
சேலம் – 7
சிவகங்கை – 2
தென்காசி – 4
தஞ்சை – 14
தேனி – 1
திருப்பத்தூர் – 1
திருவள்ளூர் -33
திருவண்ணாமலை – 3
திருவாரூர் – 4
தூத்துக்குடி – 1
திருநெல்வேலி – 6
திருப்பூர் – 25
 திருச்சி – 11
வேலூர் – 14
விழுப்புரம் – 3
விருதுநகர் – 6