சென்னை:

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறித்த மண்டலவாரி பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் ராயபுரம் மண்டலம் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3388 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று  புதிதாக 1,384 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதித்தோரின் எண்ணிக்கை 27,256 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் நேற்று 1072 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை அங்கு 18,693 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி தற்போது வெளியிட்டு உள்ளது. அதில், பாதிப்பு 2ஆயிரத்தை தாண்டி 4 மண்டலங்கள் உள்ளன. கோடம்பாக்கம் மண்டலத்தில் 2123 பேரும், தேனாம்பேட்டையில் 2,136 பேரும், தண்டையார்பேட்டையில் 2261 பேரும், திரு.வி.க. நகரில் 1855 பேரும், அண்ணா நகரில் 1660 பேரும் மற்றும் அடையாறில் 1042 பெரும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னையில் தற்போதைய பாதிப்பு எண்ணிக்கை 18,693 ஆக உள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.