சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று  பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்து உள்ளது.  சென்னையில் மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின்  மொத்த  எண்ணிக்கை  1,04,027 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை   89,969  ஆக அதிகரித்து உள்ளது.

தற்போதைய நிலையில், 11,856  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை   2,202 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் (4ந்தேதி) 10,227 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

சென்னையில் 58.99% ஆண்களும் 41.01% பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

மண்டலங்கள் வாரியாக தொற்று பாதிப்பில்இருந்து  குணமடைந்தவர்கள் விவரம்!!

1    திருவொற்றியூர்     3282
2     மணலி     1654
3     மாதவரம்     2876
4     தண்டையார்பேட்டை     8865
5     ராயபுரம்     10,404
6     திருவிக நகர்     7206
7     அம்பத்தூர்     4836
8     அண்ணா நகர்     10,432
9     தேனாம்பேட்டை    9997
10     கோடம்பாக்கம்     10,519
11     வளசரவாக்கம்     4855
12     ஆலந்தூர்     2798
13     அடையாறு     6336
14     பெருங்குடி     2523
15     சோழிங்கநல்லூர்     2022
16     இதர மாவட்டம்     1,364

மண்டலங்கள் மற்றும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை

1   திருவொற்றியூர்          423
2     மணலி     89
3     மாதவரம்     568
4     தண்டையார்பேட்டை     645
5     ராயபுரம்         796
6     திருவிக நகர்     952
7     அம்பத்தூர்          1401
8     அண்ணா நகர்     1198
9     தேனாம்பேட்டை 804
10     கோடம்பாக்கம்     1349
11     வளசரவாக்கம்     900
12     ஆலந்தூர்          520
13     அடையாறு     1012
14     பெருங்குடி     484
15     சோழிங்கநல்லூர்     482
16     இதர மாவட்டம்    233