சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் 243 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 236728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில்  குறைந்து வந்த தொற்று தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கொ ரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும்  இன்று  562 பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதுபோல, 560 பேர் குணமடைந்துனர். மேலும் 4 பேர் பலியாகி உள்ளனர்.  தமிழகத்தில்இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8,54,554 ஆகவும்  குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 8,38,085 ஆகவும் அதிகரித்து உள்ளது. அதேவேளையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை   12,517 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும்  3,952 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிக பட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 243 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 236728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இன்று மட்டும் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,  221 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போதைய நிலையில், சென்னையில் 1857 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு