சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 562 பேருக்கு புதியதாக பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதே வேளையில் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று  562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 54 ஆயிரத்து 554 (8,54,554) ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று  மேலும் 560 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 8,38,085 ஆக அதிகரித்துள்ளத.

இன்று மட்டும்   04 பேர் சகிச்சை பலனிங்னறி உயிரிழந்துள்ளனர்.  இவர்களில் அரசு மருத்துவமனையில் 03 பேரும், தனியார் மருத்துவமனையில் ஒருவரும்  உயிரிழந்துள்ளனர்.  இதன் மூலம் கொரோனாவால் உயரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 12,517 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில், தமிழகம் முழுவதும்  3,952 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 55,051 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,77,91,275 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,16,306 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 334 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,38,213 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 228 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.