டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 41லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பும் 70ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவிற்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி  80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி,  நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 41,10,839 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில்மட்டும் புதியதாக 90ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை, நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில்  இருந்து 31,77,673  பேர் மீண்டுள்ளனர். நேற்று மட்டும் 73,161 பேர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டு இந்தியாவில் 70,679  பேர் மரணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 1044 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய நிலையில் 8,61,866  பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.