சென்னை:  தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,57,697 ஆக அதிகரித்துள்ள நிலையில், அதிக பட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் மேலும் 965 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

சென்னையில்  கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  1,40,685  ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை  1,26,428 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போதைய நிலையில், சென்னையில் மட்டும் 11,412 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 சென்னையில் மொத்த கொரோனா உயிரிழப்பு 2,845 ஆக உள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 12,356 பேருக்கு தொற்று சோதனை நடத்தப்பட்டு உள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 61.39 சதவிகிதம் பேர் ஆண்கள், 38,61 சதவிகிதம் பெண்கள்