டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 42லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பும் 71,687 ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பில் பிரேசிலை பின்னுக்குத்தள்ளி 2வது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவிற்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீப நாட்களாக பாதிப்பு உச்சம் பெற்றுள்ளது. தினசரி  90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி, நேற்று ஒரே நாளில் மட்டும் புதியதாக 91,732 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 42லட்சத்து 2ஆயிரத்து  562 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில், 69,624  பேர் குணமடைந்து டிஸ்சார் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை, நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில்  இருந்து 32லட்சத்துக்கு 47ஆயரத்து 297 பேர் பேர் குணமடைந்துள்ளனர்.

நேற்று ஒரே நாளல் 1008 பேர்  கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டு இந்தியாவில் 71,787   பேர் மரணமடைந்துள்ளனர்.

தற்போதைய நிலையில் 8,61,866  பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.