சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,90,907-ஆக அதிகரித்துள்ளது.

இன்று மேலும் 118 பேர் உயிரிழந்துள்ளதால்,  இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 4,808-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு இல்லாத 9 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,043 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ள நிலையில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,32,618-ஆக அதிகரித்து இருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சென்னையில் இதுவரை ஒரு லட்சத்து 8ஆயிரத்து 124 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் 6,450 பேருக்கும் திண்டுக்கல்லில் 3,747 பேருக்கும் திருநெல்வேலியில் 6,425 பேருக்கும், ஈரோட்டில் 1,012, திருச்சியில் 5,032 பேருக்கும், நாமக்கல் 953 மற்றும் ராணிப்பேட்டை 6,744, செங்கல்பட்டு 17,411, மதுரை 11,898, கரூர் 738, தேனி 7,538 மற்றும் திருவள்ளூரில் 16,612 பேருக்கு, தூத்துக்குடியில் 8,905, விழுப்புரத்தில் 4,463 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 1,361 பேருக்கும், திருவண்ணாமலையில் 7,610, தருமபுரியில் 851 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூரில் 1,106, கடலூர் 4,628, மற்றும் சேலத்தில் 4,458, திருவாரூரில் 1,947, நாகப்பட்டினம் 1,076, திருப்பத்தூர் 1,552, கன்னியாகுமரியில் 6,222 மற்றும் காஞ்சிபுரத்தில் 11,422 பேருக்கும், சிவகங்கை 2,887 மற்றும் வேலூரில் 7,206 பேருக்கும், நீலகிரியில் 948 பேருக்கும், தென்காசி 2,952, கள்ளக்குறிச்சியில் 4,394 பேருக்கும், தஞ்சையில் 3,934, விருதுநகரில் 9,773, ராமநாதபுரத்தில் 3,585 பேருக்கும், அரியலூர் 1,245 மற்றும் பெரம்பலூரில் 686 பேருக்கும், புதுக்கோட்டையில் 3,050 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 1,962 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.