சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8,25,537  ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும்  882 பேர் குணமடைந்துள்ளனர். இதன் காரணமாக தொற்று பாதிப்பில் இருந்து விடுபட்டோர் மொத்த எண்ணிக்கை   8,06,018 ஆக அதிகரித்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்த யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.

இன்று மட்டும் 7 பேர் பலியான நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12,215 ஆக உயர்ந்துள்ளது. இன்று இறந்தவர்களில் 2 பேர் அரசு மருத்துவமனையிலும், 5 பேர் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில்,  இன்று ஒரே நாளில் 218 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சென்னையில் மட்டும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 2,27,575 ஆக அதிகரித்து உள்ளது.

தற்போதைய நிலையில், தமிழகத்தில் 7,304 பேர் கொரோனாவால் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வருகின்றனர்.

தமிழகத்தில் இதுவரை 1,47,60,619 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 65,513 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 247 மையங்களில் கொரோனா பரிசோதனை  செய்யப்பட்டுள்ளது.
அரசு மையங்கள் 68; தனியார் மையங்கள் 179 உள்ளன.