சென்னை:
மிழகத்தின் தலைநகர் சென்னையில் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது.

நேற்று தமிழகம் முழுவதும் 3,756 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு  1,22,350  ஆக உயர்ந்தது.
அதிகபட்சமாக சென்னையில் நேற்று  ஒரே நாளில் 1,261 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப் பட்டோர் மொத்த  எண்ணிக்கை 72,500  ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதுவரை  49587 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 21,766  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் நேற்று  26 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந் தோரின் எண்ணிக்கை 1146-ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் மண்டலம் வாரியாக பாதிப்பு விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட் டுள்ளது.