சென்னை

ண்ணா பல்கலக்கழகத்தின் கீழ் பொறியியல் பட்டப்படிப்பில் சேர நேற்று வரை 1.23 லட்சம் பேர் பதிவு ஆன்லைனில் செய்துள்ளனர்.

அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள தமிழ்நாட்டின் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர சேர விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படுகிறது.  இதற்கான கடைசி தேதி ஜுன் 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை வரை இதற்காக 1.23 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.   இன்னும் 5 நாட்கள் உள்ளதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்லைனில் பதிவு செய்துள்ள மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ் சரிபார்ப்பது வரும் ஜூன் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்காக 43 மையங்கள் மாநிலம் எங்கும் அமைக்கப்பட்டுள்ளன.  மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஜூலை முதல் வாரம் தொடங்க உள்ளது/