சென்னை:

ண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு முடிவுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், இதுவரை 1லட்சத்து 32 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழக்ம அறிவித்து உள்ளது.

வரும் சனிக்கிழமை ( ஜுன் 2ந்தேதி)ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவு முடிவு பெறுகிறது.

இதுவரை 1,32,255 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்து உள்ளதாகவும், இன்னும் 3 நாட்கள் அவகாசம் இருப்பதால் மேலும் பலர் விண்ணப்பிக்க வாய்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஆன்லைனில் பதிவு செய்துள்ள மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ் சரிபார்ப்பது வரும் ஜூன் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்காக 43 மையங்கள் மாநிலம் எங்கும் அமைக்கப்பட்டுள்ளன.

மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஜூலை முதல் வாரம் தொடங்க உள்ளது.