சென்னை:
மிழகத்தில்,  இன்று மேலும்  4,231 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  1,26,581  ஆக அதிகரித்து  உள்ளது.

சென்னையில் நேற்று  1216 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு  73,728ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 52,287 பேர் கொரோனா குணமடைந்து  வீடு திரும்பியுள்ளனர். 20,271  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மேலும்  23 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1169-ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் கடந்த மாா்ச் மாதத்தில் இருந்து கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இதில், ராயபுரம், தண்டையாா்பேட்டை, திரு.வி.க. நகா், அண்ணா நகா், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அடையாறு, வளசரவாக்கம், அம்பத்தூா் ஆகிய மண்டலங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக கண்டறியப்பட்டது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அறிகுறி உள்ளவா்களைக் கண்டறிதல் மற்றும் அவா்களுக்கான பரிசோதனையை மாநகராட்சி தீவிரப்படுத்தியது.
மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருவோர் விவரம்..
கோடம்பாக்கம்- 2553, அண்ணா நகர்-2236, தேனாம்பேட்டை-2036, ராயபுரம்- 1582, திரு.வி.க நகர்- 1538, அம்பத்தூர்- 1243 வளசரவாக்கம்- 1051, அடையாறு- 1263, திருவொற்றியூர்- 957 , மணலி- 396, மாதவரம்- 712, தண்டையார்பேட்டை -1522

சென்னையைப் பொருத்தவரை  நோய் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் சற்று குறைந்து வருகிறது. அதே நேரத்தில் தொற்று பாதிக்கப்பட்டு குணமடைவோரின் எண்ணிக்கையும் உயா்ந்து கொண்டே வருகிறது. இதனால் இன்று காலை நிலவரப்படி கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை வெறும் 20 ஆயிரமாகக் குறைந்துள்ளது.
சென்னையில் கடந்த 9 நாள்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 15,461 போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். இதில், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 7,340 பேரும், தண்டையாா்பேட்டையில் 6,149 பேரும், அண்ணா நகரில் 5,494 பேரும், கோடம்பாக்கத்தில் 5,084 பேரும், திரு.வி.க.நகரில் 3,993 பேரும், அடையாறில் 3,069 பேரும், வளசரவாக்கத்தில் 2,385 பேரும், அம்பத்தூரில் 2,078 பேரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.அதேவேளையில் அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 171 பேரும், தண்டையாா்பேட்டை 166 பேரும், ராயபுரத்தில் 161 பேரும், திரு.வி.க. நகரில் 115 பேரும், கோடம்பாக்கத்தில் 113 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.