சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அதேவேளையில்,  குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை  6,35,855 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில்  கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,76,779 ஆக உள்ளது. சென்னையில் தொற்று பாதிப்பு தற்போது மீண்டும உயர்ந்து வருகிறது.  இதுவரை 1,76,779 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3336 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும், 1,60,333 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது, 13,110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மண்டலம் வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம்:
கோடம்பாக்கம் – 1,348 பேர்
அண்ணா நகர் – 1,379 பேர்
தேனாம்பேட்டை – 1,316 பேர்
தண்டையார்பேட்டை – 983 பேர்
ராயபுரம் – 957 பேர்
அடையாறு- 1,046 பேர்
திரு.வி.க. நகர்- 1,149 பேர்
வளசரவாக்கம்- 836 பேர்
அம்பத்தூர்- 995 பேர்
திருவொற்றியூர்- 393 பேர்
மாதவரம்- 548 பேர்
ஆலந்தூர்- 686 பேர்
பெருங்குடி- 551 பேர்
சோழிங்கநல்லூர்- 311 பேர்
மணலியில் 241 பேர்.