சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 6,40,943 ஆக உயர்ந்துள்ளது.  அதிக பட்சமாக சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,78,108 ஆக உள்ளது.  தறபோதைய நிலையில், 13,280 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இதுவரை தொற்று பாதிப்பு காரணமாக 3351 பேர் மரணத்தை தழுவி உள்ளனர். அதே வேளையில் சிகிச்சை பெற்று குணமடைந்தோர் எண்ணிக்கை 1,61,477 ஆக அதிகரித்து உள்ளது. நேற்ற மட்டும் 13,565 பேருக்கு தொற்று சோதனை செய்யப்பட்டு உள்ளது.

மண்டலம் வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர்:
கோடம்பாக்கம் – 1,354 பேர்
அண்ணா நகர் – 1,359 பேர்
தேனாம்பேட்டை – 1,320 பேர்
தண்டையார்பேட்டை – 934 பேர்
ராயபுரம் – 959 பேர்
அடையாறு- 1,047 பேர்
திரு.வி.க. நகர்- 1,178 பேர்
வளசரவாக்கம்- 844 பேர்
அம்பத்தூர்- 983 பேர்
திருவொற்றியூர்- 406 பேர்
மாதவரம்- 561 பேர்
ஆலந்தூர்- 707 பேர்
பெருங்குடி- 585 பேர்
சோழிங்கநல்லூர்- 320 பேர்
மணலி – 260 பேர்.