சென்னை: தமிழகத்தில் இதுவரை 7,94,020 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் நேற்ற  347 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 2,18,549 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று கொரோனாவால்  14 பேர் பலியாகியுள்ளனர். அதில், 7 பேர் தனியார் மருத்துவமனையிலும், 7பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,836 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல நேற்று  1,315 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 7,71,693 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 69,824 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,23,80,758 -ஐ கடந்துள்ளது.‘

சென்னையில் கொரோனா பாதிக்கபட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 2,18549 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,893 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலையில், 3,236 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 2,11,420 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.