காபூல்: ஆப்கானிஸ்தானில் தலீபான் தாக்குதலில் படை தளபதி உள்பட 10 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நீடித்து வருகிறது. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களின் மீது தொடர்ந்து அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் குந்தூஜ் மாகாணத்தில் இமாம் சாஹிப் மாவட்டத்தில் தலீபான் தீவிரவாதிகள் நேற்றிரவு திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில், எல்லை காவல் படையை சேர்ந்த தளபதி ஒருவர் உள்பட 10 வீரர்கள் கொல்லப்பட்டனர். 6 பேர் படுகாயமடைந்து உள்ளனர். தலீபான் தாக்குதலை மாகாண கவுன்சில் உறுப்பினர் கலீல் குவாரிஜடா உறுதிப்படுத்தி இருக்கிறார்.