சென்னை:
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவும் வகையில், 22 உழவர் உற்பத்தி நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இடைநிலை மூலதன கடன் உதவி வழங்கப்பட்டது.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,   இன்று அடையாளமாக 3 நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டது.

கொரேனா பாதிப்பு காரணமாக ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணாக விவசாயம் உள்பட அனைத்து தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில், ஊரடங்கு நேரத்தில் காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர உணவு பொருள் உற்பத்தி விநியோகம் செய்ய முன்வரும் உற்பத்தி நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் இடைநிலை மூலதன கடன் உதவி வழங்கப்படும் என முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்த நிலையில்,  அதற்கான விண்ணப்பங்கள்  பரிசீலிக்கப்பட்டு 22 உழவர் உற்பத்தி நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இடைநிலை மூலதன கடன் உதவி வழங்க முடிவு செய்யப்பட்டு, இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில், 3 உற்பத்தி நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.