நாகப்பட்டினம்,

ல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையினரின் இந்த தொடர் அட்டூழியம் தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்திய கடலோர காவல்படையினர், தமிழக மீனவர்கள்மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதை கண்டித்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் நேற்று போராட்டம் நடத்திய நிலையில், நேற்று இரவு கடலில் மீன்பிடிக்க சென்ற நாகை மாவட்ட மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் 200-க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்கள்  பருத்தித்துறை கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை விரட்டி அடித்தனர். மேலும், 10 மீனவர்களையும், ஒரு படகையும் கைது  செய்தனர்.

எல்லை தாண்டி  மீன்பிடித்ததாக கூறி மீனவர்களை கைது செய்தததாக இலங்கை கடற்படை தரப்பில் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 10 பேரும், காங்கேசன் துறைமுக கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதும்,  கைது செய்யப்பட்டு வருவதும் தமிழக மீனவ மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.