டில்லி

டும் பனி மூட்டம் காரணமாக டில்லியில் 10 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களாகவே வட இந்தியாவில் பனி மூட்டம் கடுமையாக உள்ளது.    இதனால் ரெயில்கள் அடிக்கடி ரத்து செய்யப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.   டில்லியில் நேற்று குறைந்த பட்ச வெப்ப நிலை 9 டிகிரி செண்டிகிரெடாக இருந்தது.   தட்பவெட்ப நிலையில் சற்றே முன்னேற்றம் அடைந்ததாக டில்லி மக்கள் நேற்று ஆறுதல் அடைந்தனர்.

ஆனால் நேற்று இரவு முதல் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது.   இன்று காலை 8.30 மணி நிலவரப்படி பனியின் காரணமாக  மிக அருகில் உள்ளவைகளும் கன்ணுக்கு புலப்படாத நிலை ஏற்பட்டது.    இதனால் 10 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.   அது தவிர கடுமையான பனி மூட்டத்தின் காரணமாக 19 ரெயில்கள் காலதாமதாக பயணம் செய்துக் கொண்டு இருக்கின்றன.