அதர்வா முரளி முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கும் படம் 100 . போலீஸ் கண்ட்ரோல் ரூமின் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகும் முதல் படம் இது .

இப்படம் தமிழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களை எதிரொலிக்கும் விதமாக உருவாகியிருப்பதோடு, போலீஸ் கண்ட்ரோல் ரூம் பற்றி மக்கள் அறியாத பல விஷயங்களையும் அதன் பின்னணியையும் சொல்கிற படமாகவும் உள்ளது.

நாளை வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரைலர் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அதர்வாவின் சினிமா பயணத்தில் இப்படம் முக்கியமான படமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.