சென்னை:

மிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவிகிதம்  வரிவிலக்கு அளிக்கும்   புதிய மின்சார வாகன கொள்கை அறிக்கையை  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு விதிக்கப்படும்  என்றும்,  மின்வாகன தயாரிப்பாளர்களுக்கு 15 சதவீதம் முதலீட்டு மானியமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. இதன் காரணமாக  மின்சார வாகனங்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.

சமீபத்தில் நிர்மலா சீத்தாராமன் சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையில்; மின்சார வாகனங்களை வாங்குவோருக்கு வரிச்சலுகைகளை அறிவித்திருந்தார். அதுபோல, காற்று மாசுவை கட்டுப் படுத்தும் நோக்கில்,  பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களில் இருந்து மின்சார வாகனங்களுக்கு மாறுவதற்கான இலக்குகளை இந்தியா வகுத்துள்ளது.

இந்த நிலையில் மின்சார வாகனங்களுக்கான தமிழக அரசின் கொள்கை முடிவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதன் காரணமாக வாகனங்களின் விலை குறையும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.