டெல்லி:
புலம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும், மொத்தம் 3100 கோடி ரூபாய், பிரதமர் அலுவலகம் பிஎம் கேர் நிதியில் இருந்து  விடுவிக்கப்பட்டு உள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் அறிவித்து உள்ளது.
கொரோனா நிவாரணப் பணிக்கு பிஎம் கேர் நிதியில் இருந்து ரூ.3100 கோடி விடுவிக்கப்படுவதாக பிரதமர் அலுவலகம்  தெரிவித்து உள்ளது.

இந்திய அரசு ‘பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம்’ (PM CARES Fund) என்ற பெயரில் நிதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிதி அமைப்புக்கு  கொரோனா நிவாரண தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமர் மோடி நிதி கோரியிருந்தார்.
அதைத்தொடர்ந்து, பிஎம் கேர்ஸ் நிதிக்கு, அரசு அமைப்புகள், தனியார் நிறுவனங்கள், வர்த்தக மற்றும் தொழில் கூடங்கள், தனிநபர்கள், பிரபலங்கள் என பலரும்  கோடிக்கணக்கான ரூபாய் நிதி அளித்துள்ளனர்.
இந்த நிலையில், கொரோனா நிவாரண பணிகளுக்காக பிரதமர் கேர் நிதியில் இருந்து 3100 கோடி ரூபாயை விடுத்து பிரதமர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா நிவாரண பணிகளுக்காக பிரதமர் கேர் நிதியில் இருந்து 3100 கோடி ரூபாயை விடுத்து பிரதமர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த 3100 கோடி நிதியில்,   2000 கோடி ரூபாய் வென்டிலேட்டர்கள் வாங்குவதற்காக செலவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1000 கோடி ரூபாய் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காக செலவிடப்படும் எனவும்
100 கோடி ரூபாய் கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறு பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.