சென்னை:
மிழகத்தில் இன்று 5,881பேர் மேலும் பாதிக்கப்பட்டதால்,  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட் டோரின் எண்ணிக்கை 2,45,859ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை  1,83,956 பேர் நோயில் இருந்து குணமடைந்து உள்ளனர். இன்று மட்டும் 97 சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில்,  கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,935 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இருந்தாலும் ஆயிரத்தை தாண்டியே பாதிப்பு உறுதியாகி வருகிறது.   இன்று ஒரே நாளில் 1,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 99,794 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இதுவரை 84,916 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 12,765 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.