சென்னை:

10வது வகுப்பு பொதுத்தேர்வு முடிவு கடந்த ஏப்ரல் மாதம் 29ந்தேதி வெளியான நிலையில்,  தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான சிறப்பு மறுதேர்வு ஜூன் 14 முதல் 22 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், . தேர்வு எழுதுபவர்களுக்கான  ஹால் டிக்கெட் இணையதளத்தில் வரும் 3ந்தேதி வெளியாகும் என்று தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.

தமிழகம் புதுச்சேரி 10ம் வகுப்பு தேர்வு முடிவு கடந்த  ஏப்ரல் மாதம் 29ந்தேதி   வெளியானது. மொத்தத்தில்  95.2 சதவிகிதம் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும், இவர்களில் மாணவிகள்  97 சதவீதமும்,  மாணவர்கள்- 93.3 சதவீதம் தேர்ச்சி பெற்றிருப்பதாக தேர்வுத்துறை அறிவித்தது. அதையடுத்து, தேர்ச்சி பெறாத மாணவ மாணவிகள், தட்கல் முறையில் சிறப்பு தேர்வு எழுதுவதற்கான தேதி  ஜூன் 14 முதல் 22 வரை என அறிவிக்கப்பட்டருந்தது.

இந்த நிலையில், சிறப்பு தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள்  ஜூன் 3ந்தேதி ஹால்டிக்கெட்டை இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளம் என்று தேர்வு துறை அறிவித்து உள்ளது.

 www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் வரும் 3ம் தேதி முதல் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.