சென்னை,

மிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி எனப்படும் 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.4 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு முதல் தேர்வு முடிவுகள் அனைத்தும் பிளஸ்2வை போல கிரேடு முறையிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 8ம் தேதி தொடங்கி 31ம் தேதி முடிந்தது. தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதினர்.

இவர்களில் 4 லட்சத்து 98 ஆயிரத்து 383 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 95 ஆயிரத்து 784 பேர் மாணவியர்.

 

இந்த ஆண்டு 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளவர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் (100/100) :  69 பேர் மட்டுமே

ஆங்கிலம் (100/100) :  யாரும் எடுக்கவில்லை

கணிதம்  (100/100) :  13, 751 பேர்

அறிவியல்  (100/100) :  17,481 பேர்

சமூக அறிவியல்  (100/100) : 61,115 பேர்