சென்னை:  தமிழகத்தில்  கொரோனா பாதிக்கப்பட்டோர்  மொத்த  எண்ணிக்கை  7,29,507  ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில் நேற்று  671 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இதுவரை  2,01,195 பேர்  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில்  9 பேர் உயிர் இழந்த நிலையில், சென்னையில் இதுவரை  3,669 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று ஒரே நாளில்  1238 பேர் குணம் அடைந்ததைத் தொடர்ந்து இதுவரை  மொத்தம் 1,91,104 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போதைய நிலையில்,  சென்னையில் 6,422 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்

கோடம்பாக்கம் – 474 பேர்

அண்ணா நகர் – 489 பேர்

தேனாம்பேட்டை – 405 பேர்

தண்டையார்பேட்டை – 232 பேர்

ராயபுரம் – 310 பேர்

அடையாறு- 354 பேர்

திரு.வி.க. நகர்- 445 பேர்

வளசரவாக்கம்- 240 பேர்

அம்பத்தூர்- 326 பேர்

திருவொற்றியூர்- 125 பேர்

மாதவரம்- 147 பேர்

ஆலந்தூர்- 168 பேர்

பெருங்குடி- 188 பேர்

சோழிங்கநல்லூர்- 89 பேர்

மணலியில் 108 பேர்.