சென்னை:

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ராயபுரம் மண்டலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4ஆயிரத்தை கடந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக1,927 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை  36, 841 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று 1,392 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இன்று (11ந்தேதி) காலை 10 மணி நிலவரப்படி  சென்னையில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 25,937 ஆக உயர்ந்துள்ளது.  தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12,839 ஆக உள்ளது. இதுவரை நோயில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 12,507 என்றும், பலி எண்ணிக்கை 258 என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

10.06.2020 அன்று வரை, பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து, கொரோனா நுண்கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 48.8% பேர் (12,507) குணமடைந்து ள்ளனர்; இறப்பு சதவிகிதம் 1% ஆக உள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் உள்ள கொரோனா பாதிப்பு விபரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.

அதில், அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 4,405 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து, அண்ணாநகர் மண்டலத்தில் இதுவரை 2,362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தண்டையார்பேட்டை மண்டலத்தில் 3,405பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.