சென்னை: தமிழகத்தில்  கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,86,052 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 991 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்கள் மொத்த எண்ணிக்கை 1,45,606 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மட்டுமே 1,009 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை சென்னையில் மட்டும் தொற்று பாதிப்பில் இருந்து  1,31,840 பேர்மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

தற்போதைய நிலையில், 10,845 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று மட்டும் 11 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 2,921 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

நேற்று ஒரே நாளில், 12,540 பேருக்கு தொற்று சோதனை நடத்தப்பட்டுள்ளது.