சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.  மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 48 ஆயிரத்து 225 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் மாநிலம்  முழுவதும்  18 ஆயிரத்து 709 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  நேற்று மட்டும்  2 ஆயிரத்து 237 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதையடுத்து, இதுவரை   கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 18 ஆயிரத்து 129 ஆக அதிகரித்துள்ளது. அதே வேளையில் கொரோனா உயிரிழப்பு  11 ஆயிரத்து 387 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று பாதிப்பில் மாநிலத்திலேயே சென்னை முதலிடத்தில்  தொடர்ந்து வருகிறது. நேற்று மட்டும், புதிதாக 577 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு 2,06,024 ஆக உயர்ந்துள்ளது.  அதுபோல இதுவரை  3,734 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று வரை  1,96,471 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,734 பேர் ஆக அதிகரித்து உள்ளது.