மும்பை: விமான நிலையத்தில் பணியாற்றிய மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. 2895 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 75 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை கட்டுக்குள் கொண்டு வர நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் மும்பை விமான நிலையத்தில் பணியாற்றிய மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அம் மாநிலத்தில் சில நாட்களில் மட்டும் 142 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் 4 பேருக்கு கொரோனா இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. மற்றவர்களுக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் மட்டும் 423 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.