சென்னை:

மிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 3ந்தேதி திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மாணவர்களுக்கு 11 அதிரடி கட்டளைகளையும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

அதன்படி இனிமேல் மாணவர்கள், லோஹிப் பேன்ட், மீசை தாடி வைக்கக்கூடாது போன்ற  நடத்தை விதிகளை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதை பள்ளி ஆசிரியர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

11 கட்டளைகள் விவரம்:

1.காலை 9.15 மணிக்குள் பள்ளிக்கு வரவேண்டும்.

2.பைக் ., செல்போன், ஸ்மார்ட்போன் பள்ளிக்கு கண்டிப்பாக எடுத்து வரக்கூடாது. மீறினால் பறிமுதல் செய்யப்படும் பொருட்கள் திரும்ப வழங்கப்பட மாட்டாது.

3.லோ ஹிப் , டைட் பேண்ட் அணிந்து வரக்கூடாது.

4.அரைக்ககை சட்டை மட்டுமே அணிந்து வர வேண்டும் அது இறுக்கமாக, குட்டையாக இருக்கக்கூடாது.

5.தலைமுடி சீரான முறையில் வெட்டி இருக்க வேண்டும் போலீஸ் கட்டிங் மட்டுமே அனுமதி.

6.கருப்பு கலர் சிறிய பக்கிள் கொண்ட பெல்ட் மட்டுமே அனுமதி.

7.டக் இன் செய்யும் போது சட்டை வெளியே வரக்கூடாது மற்றும் சீரற்ற முறையில் டக் இன் செய்யக்கூடாது.

8.மேலுதட்டை தாண்டி முறுக்கு மீசை தாடி வைக்க கூடாது.

9.கைகளில் வளையம் கயிறு செயின் அணியக்கூடாது.

10.பிறந்தநாள் என்றாலும் சீருடையில் மட்டுமே வரவேண்டும்.

11.விடுமுறை எடுக்கும்போது பெற்றோர் ஆசிரியர் அனுமதி கையெழுத்து பெற்ற பின் மட்டுமே எடுக்க வேண்டும்.