ம்லா, ஜார்க்கண்ட்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு ட்ரக் மற்றும் ஷேர் ஆட்டோ மோதியதில் 11 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நாடெங்கும் தற்போது ஷேர் ஆட்டோக்கள் பெருகி வருகின்றன.    அவற்றில் அளவுக்கு மீறி ஆட்களை ஏற்றிச் செல்வதும் அதிகரித்து வருகிறது.   இதனால் விபத்திக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பலர் அறிவுறுத்தியும் இந்தப் பழக்கம் தொடர்ந்து வருகிறது.

நேற்று இரவு ஜார்க்கண்ட் மாநிலத்தின் கம்லா மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் ஒரு ஆட்டோ சென்றுக் கொண்டிருந்தது.   இரவு சுமார் 8 மணி அளவில் பல்மடிபா என்னும் கிராமம் அருகே ஆட்டோவின் மீது எதிரே வந்த டிரக் மோதி உள்ளது.     அந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆட்டோவில் பயணம் செய்தவர்களில் 11 பேர் மரணம் அடைந்துள்ளனர்.    5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படு சிகிச்சை பெற்று வருகின்றனர்.    காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.