தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில், 11 பேர் உயிரிழந்து உள்ளனர். இது குறித்து அறிந்து வேதனை அடைந்ததாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
இதுதுகுறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“தூத்துக்குடியில் 11 பேர் உயிரிழந்ததை கேட்டு என்னுடைய மனம் வேதனை அடைந்துள்ளது. உயிரிழந்த வர்களின் குடும்பங்களுக்கு என ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இக்கட்டான சூழலில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு அமைதியாக இருக்க அனைத்து தரப்பு மக்களும் அமைதி காக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, உதகையில் தொடங்கிவைக்க இருந்த 2 நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவசரமாக சென்னை திரும்புகிறார்.