ராமநாதபுரம்:

டலில் அத்துமீறி எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது  மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 11 பேரை கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையினர் இன்று சிறைப்பிடித்துள்ளனர்.  எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 பேர், இரண்டு விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுக கடற்படை கொண்டு சென்று இலங்கை கடற்படை விசாரணை செய்து வருகிறது. இது தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக மீனவர்கள் 11 பேர் கைது செய்துள்ள சிங்களக் கடற்படையினரின் அத்துமீறலும், அட்டகாசமும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியவை; முடிவு கட்டப்பட வேண்டியவை.  என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.