சென்னை

மிழக 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
 

கடந்த மார்ச் மாதம் 8.16 லட்சம் மாணவ மாணவியர் 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் எழுதினர்.

இதற்கான முடிவுகள் இன்று இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

மொத்தம் தேர்வு எழுதியோரில் 92.3% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு எழுதிய மாணவிகளில் 94.80% பேரும் மாணவர்களில் 89.41% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களை விட மாணவிகள் 5.39% கூடுதலாக உள்ளனர்.

முடிவுகளில் 97.12% தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.