மதிப்புக்க பாடகர்கள் இன்று பலர் உள்ளனர். எனது நண்பர்கள் பலரும் எனக்கு அடித்தளமிட்டுள்ளனர். ரிதம் முரளி, டி.ரவிகிரண், விக்கேன்ஷ்வரன், ராம கிருஷ்ண மூர்த்தி, ரித்விக் ராஜா போன்று அற்புதமானவர்கள் உள்ளனர். இது ஒரு நீண்ட தூர பயணம், இந்த துறையில் உள்ளவர்கள் மேலும், மேலும் வளர்ந்து செல்வதை பார்க்கிறேன்.
பழமைவாய்ந்த, பராரம்பரியமான இந்த இசையை ஒரு சிறிய குழுவினர் தங்களை அர்ப்பணித்து பணியாற்றி வருவது அற்புதமானதாகும். எனது பெற்றோர் எப்போதுமே எனக்கு ஆதரவாக இருந்தார்கள். உன் வழியில் செல் என்று என்னை அனுமதித்தார்கள். எனக்கு எந்த வேலையும் இல்லை. அதனால் முழு ஈடுபாட்டுடன் இருந்தேன். ஆனால் சென்னையில் குடும்பத்தை காப்பாத்த வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கும். அவர்களால் என்னைப்போல் முழு நேரமும் இதில் ஈடுபடமுடியுமா என்பது கேள்விகுறிதான்.