டில்லி:

வியாட்நாம் பிரதமர் ட்ரான் டாய் குவாங் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டில்லியில் முப்படை அணிவகுப்புடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து ராணுவம், எரிவாயு, விவசாயம், ஜவுளி உள்ளிட்ட 12 ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தானது.

பிரதமர் மோடி கூறுகையில், ‘‘இந்தியா வியாட்நாம் இடையே நல்லுறவு நீடிக்கிறது. இந்தியா மீதான வியாட்நாமின் நம்பிக்கைக்கு தலைவணங்குகிறேன். சர்வதேச எல்லையில் இந்தியாவும் வியட்நாமும் வெளிப்படைத்தன்மையுடன் இணைந்து செயல்படும்’’ என்றார்.