ராமேஸ்வரம்,

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல் காரணமாக தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து  ஏராளமான விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள்   நெடுந்தீவு அருகே, மீன் பிடித்துக்கொண்டி ருந்தனர்.

அப்போது அந்த பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர், அவர்களை அங்கிருந்து விரட்டி யடித்தனர். மேலும், 12 மீனவர்களையும் அவர்களது 2 படகுகளையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இலங்கை கடற்படையினரின் இதுபோன்ற தொடர் நடவடிக்கை காரணமாக தமிழக மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்த விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேசி  தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.