டெல்லி:

ந்தியாவில் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் பலியான நிலையில்,  1,211 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் . மொத்த எண்ணிக்கை 10,363 ஆக உயர்ந்து உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறியதாவது

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,363 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல  பலி எண்ணிக்கை 339 ஆகவும் அதிகரித்துள்ளது.  சிகிச்சை பெற்று குணமடைந்தோர் எண்ணிக்கை 1036 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக 1,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு  இருப்தாகவும் 31 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோன்று கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 179 பேர் கொரோனாவில் இருந்து விடுபட்டு இருப்தபாகவும் தெரிவித்தார்.

இந்தியாவில் இதுவரை 2,31,902 கொரோனா ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இருப்பதாf இந்திய மருத்து ஆராய்ச்சி கவுன்சில் தகவல் வெளியிட்டுள்ளது.