புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற்து. இன்று ஒரே நாளில் மேலும் 122 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றொரு என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ கொரோனா தொற்று உறுதியானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதையடுத்து முதல்வர் உள்பட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், சட்டமன்ற அலுவலகர்கள் அனைவருக்கும் தொற்று சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில்  கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் மேலும் 122பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 114 பேரும் காரைக்காலில் 8 பேர் என புதிதாக 122 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.  இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,293 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,953 ஆக உள்ளது. மேலும் 1,292 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்து உள்ளது.
இவ்வாறு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.