சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டு உள்ளது. இதுவரை பாதிப்பு  4 லட்சத்தை தாண்டி உள்ளது.

தமிழகத்தில் இன்று  மேலும் 6,495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரேனா  பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,22,085 ஆக அதிகரித்துள்ளது.

 சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 34-ஆயிரத்தை கடந்தது.

இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 1249 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில்,  இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1, 34,436  -ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கொரோனாவில் இருந்து 1,18,235 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் கொரோனா பாதிப்பால் 2,729 பேர் உயிரிழந்துள்ளனர்.