திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் வருவாய் ரூ.1.27 கோடி என்று கோவில் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொதுமக்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல், மாதம் இரண்டு முறை எண்ணப்படுவது வழக்கம். இந்த மாதம் உண்டியல் முதல் முறையாக கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் எண்ணப்பட்டன.

இதில், நிரந்தர உண்டியலில் இருந்து 1 கோடியே 27 லட்சத்து 27 ஆயிரத்து 91 ரூபாய் கிடைத்துள்ளது. அதேபோல் 764 கிராம் தங்கமும், 21 ஆயிரத்து 960 கிராம் வெள்ளியும், 32 வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்ததாக கோவில் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.