சென்னை:
மிழகத்தில் இன்று மேலும்  4,496 பேருக்கு  கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால்  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,51,820 ஆக உயர்ந்துள்ளது.

இன்று பாதிப்புக்குள்ளான 4,496 பேரில், 1291 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  80,961 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இதுவரை 64,036 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
தற்போதை நிலையில், 15,606  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் ஒரே நாளில் 23 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,318 ஆக உயர்ந்துள்ளது.