சென்ன‍ை: மாநில கல்வி வாரியத்தில் பயிலும் 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கான செய்முறைத் தேர்வில் கடைபிடிக்கப்பட வேண்டிய தெளிவான வழிகாட்டு விதிமுறைகளை வழங்கியுள்ளது பள்ளிக் கல்வித்துறை.

ஏப்ரல் 16ம் தேதி முதல், 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கான செய்முறைத் தேர்வு தொடங்குகிறது.

அந்த வழிமுறைகள் பின்வருமாறு:

  1. செய்முறைத் தேர்வுக்கு முன்னதாகவும் பின்னதாகவும், ஆய்வகம் நல்ல முறையில் சுத்தம் செய்யப்பட வேண்டும்.
  2. செய்முறை தேர்வு உபகரணங்கள், தேர்வுக்கு முன்னதாகவும், பின்னதாகவும் நன்றாக சுத்தம் செய்யப்பட வேண்டும்.
  3. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில், சமூக உபகரணங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கேற்ற எண்ணிக்கையில், மாணாக்கர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.
  4. ஒவ்வொரு மாணாக்கருக்கும் தேவையான இடஅளவு உறுதி செய்யப்பட்டிருக்க வ‍ேண்டும்.
  5. தேவையான அளவு கை சுத்திகரிப்பான்கள்(hand sanitizers) இருக்க வேண்டும்.
  6. கை சுத்திகரிப்பான்கள் எரியும் தன்மை கொண்டது என்பதால், ஆபத்தான ஆய்வகப் பொருட்களின் அருகில் வைக்கப்பட்டிருக்க கூடாது என்பதை உறுதி செய்தல் வேண்டும்.
  7. கை சுத்திரிப்பானை பயன்படுத்தியவுடன், எரியக்கூடிய எந்த ஆய்வகப் பொருளையும் மாணாக்கர்கள் தொடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட வேண்டும்.
  8. மாணாக்கர்கள் மற்றும் ஆய்வகப் பணியாளர்கள் அனைவருக்கும், கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பான நடவடிக்கைகள் தெளிவாக விளக்கப்பட்டிருக்க வேண்டும். (முகக்கவசம் அணிதல், கை சுத்தம் செய்தல், சமூக இடைவெளி உள்ளிட்டவை)
  9. செய்முறைத் தேர்வின்போது, கதவுகள் மற்றும் ஜன்னல்கள், நன்றாக திறந்து வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
  10. சீரான காற்றுப் போக்குவரத்தை உறுதிசெய்யும் விதமாக, வெளியேற்று விசிறியின் இயக்கத்தை உறுதிசெய்ய வேண்டும்.
  11. சம்பந்தப்பட்ட அனைவரும் தெர்மல் ஸ்கேனரால் பரிசோதிக்கப்பட்டிருக்க வேண்டும்.
  12. அனைத்து மாணாக்கர்கள் மற்றும் ஊழியர்கள், கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.
  13. மாணாக்கர்கள், தாங்களே குடிதண்ணீர் மற்றும் கை சுத்திகரிப்பான் ஆகியவற்றை கொண்டுவரலாம்.
  14. செய்முறைத் தேர்வுக்கு முன்னரும் பின்னரும், மாணாக்கர்கள் தங்களின் கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
  15. காத்திருப்பு அறைகள் நன்றாக சுத்தம் செய்யப்பட்டிருக்க வ‍ேண்டும்.
  16. கழிவறைகள் நன்றாக சுத்தம் செய்யப்பட்டு, போதுமான தண்ணீர் வசதி செய்யப்பட்டிருக்க வ‍ேண்டும்.

உள்ளிட்ட 21 வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இவைதவிர, சில துணை வழிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளன.