சென்னை: தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று(மார்ச் 2) துவங்குகிறது. காலை 10 மணிக்கு துவங்கும் தேர்வு பிற்பகல் 1.15 வரை நடைபெறுகிறது.

இத்தேர்வினை மொத்தம் 8 லட்சத்து 401 மாணாக்கர்கள் எழுதுகின்றனர். மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.

இந்தமுறை, தேர்வின்போது வினாத்தாளை வாசிக்க கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இல்லையெனில், தேர்வு வழக்கமாக பிற்பகல் 1 மணிக்கே முடிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 2ம் தேதி துவங்கி, மார்ச் 24ம் தேதி தேர்வுகள் முடிவடையும். ஏப்ரல் 24ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும். இதனையடுத்து மாணாக்கர்கள் பட்டப் படிப்புகளில் சேரலாம்.